உள்ளூர் செய்திகள் (District)
க.பரமத்தி அருகே சேவல் சண்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது
- க.பரமத்தி அருகே சேவல் சண்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- அமராவதி ஆற்றங்கரையோர பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது
கரூர்:
க.பரமத்தி ஒன்றியம் விசுவநாதபுரி அருகே அணியாபுரம் அமராவதி ஆற்றங்கரையோர பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக வந்த தகவலின் பேரில் க.பரமத்தி சப் இன்ஸ்பெக்டர் உதய குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, சேவல் சண்டை போட்டியில் ஈடுபட்ட விசுவநாதபுரி கிழக்குதெரு பழனிச்சாமி மகன் ஜெயபாரதி( வயது 30), திருக்காம்புலியூர் ரவி மகன் பிரகாஷ் (31) ஆகிய 2 பேரை க.பரமத்தி போலீசார் கைது செய்தனர்.