- மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
கரூர்:
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே பூங்கோடை வாய்க்கால் மேட்டு பகுதியில் மதுபாட்டில்களை விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் கண்கானிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நொய்யல் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த மகுடேஸ்வரன் (வயது48) என்பவர் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதே போல் மூலிமங்கலம் பிரிவு பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்த ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே கூடலூர் பகுதியை சேர்ந்த அங்குசாமி(34) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து விற்பனைக்கு வைத்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.