உள்ளூர் செய்திகள் (District)

மது விற்ற 3 பேர் கைது

Published On 2023-05-28 07:59 GMT   |   Update On 2023-05-28 07:59 GMT
  • மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • அவர்களிடமிருந்து மொத்தம் 27 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கரூர்:

குளித்தலை அருகே உள்ள கணேசபுரம், குமாரமங்கலம் மற்றும் சுங்ககேட் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பகுதிகளுக்கு சென்ற போலீசார் கணேசபுரம் பகுதியில் மது விற்ற மணிவேல் (வயது 48), குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த அண்ணாவி (43), சிவகங்கை மாவட்ட பகுதியைச் சேர்ந்த பிரகாசம் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 27 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags:    

Similar News