உள்ளூர் செய்திகள் (District)
ஓடும் பஸ்சில் 5 பவுன்தங்க செயின் 'அபேஸ்'
மர்மநபரை தேடி வரும் போலீசார்
கரூர்,
கரூர் அருகே, வெங்கமேடு பகுதியை சேர்ந்த நடராஜன் மனைவி பழனியம்மாள் (வயது 65). இவர் கரூர், ரத்தினம் சாலை பஸ் ஸ்டாப்பிலிருந்து, வெங்கமேடு புளியமரம் பஸ் ஸ்டாப் வரை அரசு பஸ்சில் பயணம் செய்துள்ளார். பேருந்தில் இருந்து இறங்கிய போது பழனியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த, 5 பவுன் தங்க செயினை காணவில்லை. யாரோ ஒரு மர்ம ஆசாமி அவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை 'அபேஸ்' செய்து சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து, பழனியம்மாள்அளித்த புகாரின் பேரில் வெங்கமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.