உள்ளூர் செய்திகள் (District)
- தீக்குளித்த கூலி தொழிலாளி பலியானார்.
- மது போதையில் நடந்த சம்பவம்
கரூர்:
கரூர் பொரிக்காரத் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது49). கூலித் தொழிலாளி. இவர் இதே தெருவில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 8 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். குடிப்பழக்கம் உள்ள கண்ணன் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 28-ம்தேதி வீட்டுக்குள் சென்ற அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வாடகை வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.