உள்ளூர் செய்திகள் (District)

கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது

Published On 2023-05-27 06:35 GMT   |   Update On 2023-05-27 06:35 GMT
  • கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்யபட்டார்
  • தப்பியோடிய வேல்முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர்,

கரூர் பசுபதிபாளையம் அருணாசலம் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார்(வயது25). இவர் கரூர் கொளந்தாகவுண்டனூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 2 பேர் கத்தியை காட்டி அருண்குமாரிடம் ரூ.200ஐ பறித்து சென்றனர். பின்னர் இதுகுறித்து அருண்குமார் பசுபதிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் கத்தியை காட்டி பணம் பறித்த அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ், வேல்முருகன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து, சந்தோஷை கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும் தப்பியோடிய வேல்முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News