உள்ளூர் செய்திகள் (District)

க.பரமத்தி அருகே மொபட் மீது லாரி மோதி தொழிலாளி பலி

Published On 2023-05-14 07:04 GMT   |   Update On 2023-05-14 07:05 GMT
  • க.பரமத்தி அருகே மொபட் மீது லாரி மோதி தொழிலாளி பலியானார்.
  • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்:

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே செட்டியபட்டியை சேர்ந்தவர் வைரவன் (வயது 49). இவர் தற்போது க. பரமத்தி அருகே உள்ள தனியார் கல் குவாரியில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இதனால் அவர் கரூர் அருகே உள்ள கோவிந்தம் பாளையத்தில் குடியிருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று தனது வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதற்காக மொபட்டில் கரூர்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் மேற்கு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பவுத்திரம் மேடு அருகே எதிரே அந்த வழியாக வந்த ஒரு லாரி வைரவன் ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த வைரவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த க.பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வைரவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வைரவன் மனைவி தமிழரசி கொடுத்த புகாரின் பேரில் க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News