உள்ளூர் செய்திகள்

வாழை சாகுபடி பணி துவக்கம்

Published On 2023-03-15 08:14 GMT   |   Update On 2023-03-15 08:14 GMT
  • விவசாய நிலம் தயார் படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று முடிந்த நிலையில் தொடங்கியது
  • பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி ரகங்கள் சாகுபடி

கரூர்,

கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டு மகாதானபுரம் பகுதியில் வாய்க்கால் பாசனம் மூலம் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் நெல் அறுவடை பணிகள் முடிந்ததை தொடர்ந்து மாற்று பயிர்கள் சாகுபடி செய்யும் வகையில் வாழை நடவு பணிகள் துவங்கியுள்ளது. இதற்காக விவசாய நிலங்களை தயார்படுத்தும் பணி நடந்தது. பின் புதிய வாழை கன்றுகள் நடும் பணி நடந்தது. தற்போது பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி ஆகிய ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

Tags:    

Similar News