உள்ளூர் செய்திகள் (District)

கரூர் டாஸ்மாக் பாரில் மது விற்ற 17 பேர் மீது வழக்கு

Published On 2023-04-03 08:20 GMT   |   Update On 2023-04-03 08:20 GMT
  • 159 குவார்ட்டர் பாட்டில்கள் பறிமுதல்
  • போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட எஸ்.பி. உத்தரவு

கரூர், 

கரூர் மாவட்டத்தில் 90 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இக்கடைகள் 12 மணி முதல 10 மணி வரை செயல்படுகிறது. ஆனால் இதன் பார்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. உத்தரவையடுத்து, மாவட்ட மது விலக்கு போலீசார்களும், அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசார்களும் தீவிர சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அந்த வகையில் கரூர், வெள்ளியணை, தென் னிலை, தாந்தோணிமலை, பசுபதிபாளையம், வெங்க மேடு, லாலாப்பேட்டை, மாயனூர், வாங்கல், வேலா யுதம்பாளையம் மற்றும் மதுவிலக்கு போலீசார் பல்வேறு பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விற்பனை செய்ய முயன்றதாக 17 பேர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களிடம் இருந்து 159 குவார்ட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த சில மாதங்களாக கரூர் மாவட்டத்தில் பரவலாக மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய் யும் நிகழ்வுகள் தொடர்ச் சியாக நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட போலீசார் களும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த நிகழ்வுகளை முற்றிலும் கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News