உள்ளூர் செய்திகள் (District)
சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு
- போலீசார் அண்ணாநகர் பகுதியில் ரோந்து சென்ற போது சிக்கினர்
- 5600 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
கரூர்,
வாங்கல் அருகே, சூதாட்டத்தில் ஈடு பட்ட ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், வாங்கல் போலீஸ் எஸ்.ஐ., உதயகுமார் உள்ளிட்ட, போலீசார் மண்மங்கலம் அண்ணா நகர் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, பணம் வைத்து சூதாட் டத்தில் ஈடுபட்டதாக மணிகண்டன் (வயது 35), மூர்த்தி (42), பார்த்திபன் (32), விஜய் (25), பழனிசாமி (35) ஆகிய ஐந்து பேர் வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.மேலும், அவர்களிடமிருந்து சூதாட்டத் துக்கு பயன்படுத்தப்பட்ட, 5,600 ரூபா யையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.