உள்ளூர் செய்திகள் (District)
போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு
- போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு பதியபட்டுள்ளது
- இவர் சிறுமியிடம் பலமுறை பாலியல் ரீதியாக தொடர்பு வைத்துள்ளார்.
கரூர்:
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள குரும்பப்பட்டியை சேர்ந்தவர் மகேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியிடம் பலமுறை பாலியல் ரீதியாக தொடர்பு வைத்துள்ளார். இதனால், கர்ப்பமடைந்த சிறுமிக்கு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இது குறித்து, கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், கரூர் குழந்தைகள் நல அலுவலர் சதீஸ்குமார் புகார் அளித்தார். அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.