உள்ளூர் செய்திகள்

பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்

Published On 2022-12-26 08:55 GMT   |   Update On 2022-12-26 08:55 GMT
  • தோகைமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பாக நடைபெற்றது
  • பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கரூர்:

குளித்தலை அருகே தோகைமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ராச்சாண்டர் திருமலையில் முன்னாள் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் தோகைமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பூதேரி அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், தலைமைக் கழக பேச்சாளர் பொன்னேரி சிவா தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்தும், பேராசிரியர் அன்பழகன் பற்றியும் சிறப்புரை ஆற்றினார், விழாவில் தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ராமர், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பல்லவி ராஜா, கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் சின்னையன், செயற்குழு உறுப்பினர் சிவராமன், பொதுக்குழு உறுப்பினர் ஜாபருல்லா, முன்னால் குளித்தலை ஒன்றிய குழு தலைவர் தியாகராஜன், முன்னாள் தோகைமலை ஒன்றிய குழு தலைவர் கண்ணன், மாவட்ட பிரதிநிதி சந்திரன், மற்றும் தோகைமலை கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் அணியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  





Tags:    

Similar News