உள்ளூர் செய்திகள்

சேவல் சண்டை

Published On 2023-02-28 08:54 GMT   |   Update On 2023-02-28 08:54 GMT
  • 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
  • பணம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை

கரூர்,

கரூர் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார், வைரக்கல்மேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சேவல் சண்டை நடத்திய அக்பர் அலி (வயது 36), கார்த்திக் (30), சுதாகர் (41), நெப்போலியன் (35), சஞ்சய்குமார் (26), மணி (29) உள்பட 6 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து இரண்டு சேவல்கள், 200 ரூபாய் ஆகியவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News