உள்ளூர் செய்திகள் (District)
அனுமதியின்றி ஆடல், பாடல் நிகழ்ச்சி
- போலீஸ் அனுமதி இன்றி நடைபெற்ற ஆடல், பாடல்
- ஆடியோ உரிமையாளர் உள்பட 13 பேர் மீது வழக்கு
கரூர்,
வேலாயுதம்பாளையம் அருகே, அனுமதியின்றி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தியதாக, 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே, மூலிமங்கலத்தில் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. கோவிலுக்கு அருகில், போலீஸ் அனுமதி பெறாமல்,ஆடல், பாடல் நிகழ்ச்சி நடப் பதாக புகார் எழுந்தது.இதையடுத்து போலீஸ் எஸ்.ஐ., சரவணன் கொடுத்த புகார்படி, கரூரை சேர்ந்த நடன ஒருங்கிணைப்பாளர் அறிவழகன் (வயது 35), சேலம் மாவட்டம், சங்ககிரியை சேர்ந்த ஆடியோ உரிமையாளர் விஜயகுமார், (40), உள்பட, 13 பேர் மீது, வேலாயுதம்பா ளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.