கரூர் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி
- கரூர் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடந்தது
- பள்ளிக்கல்வித்துறை சார்பில்
கரூர்:
தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள அமுதசுரபி தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கரூர் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது, போட்டியில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து சிலம்பாட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்,
60 கிலோ எடை பிரிவில் 19 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் செயிண்ட் ஆண்டனீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆதித்யா மாவட்டத்தில் அளவில் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தொடர்ந்து 12-ம் வகுப்பு மாணவர் 60 கிலோ எடை பிரிவில் மாவட்ட அளவில் திலீப் முதலிடம் பெற்றுள்ளார்,
17 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் மாவட்ட அளவில் ஸ்ரீ கிருஷ்ணா முதலிடம் பெற்றுள்ளார். 14 வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவில் கனிஷ்கா மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இவர்கள் அடுத்த மாதம் மாநில அளவிலான நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களை செயிண்ட் ஆண்டனீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் கிரேஸி, விளையாட்டு ஆசிரியர் பூமொழி சிலம்பரசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.