உள்ளூர் செய்திகள்
- மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியானார்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
கரூர்,
கரூர் மண்மங்கலம் தாலுகாவுக்குட்பட்ட சோமூர் அருகே உள்ள செல்லாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 70), விவசாயி. இவர் சோமூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் வயரில் முத்துசாமியின் கால் பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட முத்துசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வாங்கல் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.