உள்ளூர் செய்திகள்

இலவச மின்சாரம் வழங்க கோரி விவசாயிகள் மனு

Published On 2023-04-04 08:46 GMT   |   Update On 2023-04-04 08:46 GMT
  • ஆண்டுக்கு 30 ஆயிரம் வரை மின் கட்டணம் கட்டுவதாக வேதனை
  • மாவட்ட நிர்வாகத்தினம் மனு அளித்தனர்

கரூர், 

விவசாய மின் இணைப்புகளை, இலவச மின்சார திட்டத்தில் சேர்க்க கோரி, லாலாப்பேட்டை, பிள்ளபாளையம் மற்றும் மருதாண்டான் வாய்க்கால் பாசன விவசாயிகள் நலச்சங்கத்தினர், மாவட்ட நிர் வாகத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதி விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கிடைக்க காலம் தாமதம் ஆகிறது. ஆண்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. விவசாய பயிர்களுக்கு உரிய விலை கிடைக்காதது, கூலி ஆட்கள் பற்றாக்குறை, உரம் விலை உயர்வு போன்ற காரணங்களால் மின் கட் டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே எங்களது விவசாய மின் இணைப்புகளை, இலவச மின் இணைப்பாக மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப் பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News