உள்ளூர் செய்திகள்

தேசிய குத்துச் சண்டை போட்டி அரசு கல்லூரி மாணவர்கள தேர்வு

Published On 2023-01-02 07:33 GMT   |   Update On 2023-01-02 07:35 GMT
  • உடற்கல்வித்துறை இயக்குநர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
  • தேசிய குத்துச் சண்டை போட்டி அரசு கல்லூரி மாணவர்கள தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

கரூர்:

தேசிய அளவிலான குத்துச் சண்டை போட்டிக்கு கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹரியானா மாநிலத்தில் வரும் 3-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை தேசிய அளவிலான குத்துச் சண்டை போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு கல்லூரியான கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் குமார், கார்த்திக்ராஜா ஆகியோர் விளையாட தேர்வு பெற்றுள்ளனர். தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு விளையாட உள்ள மாணவர்களை கல்லூரி முதல்வர் கவுசல்யா தேவி, உடற்கல்வித்துறை இயக்குநர் ராஜேந்திரன் உட்பட அனைத்து பேராசிரியர்களும், மாணவர்களும் பாராட்டினர்.




Tags:    

Similar News