உள்ளூர் செய்திகள்

முருகன் கோவில்களில் கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை

Published On 2023-10-31 08:47 GMT   |   Update On 2023-10-31 08:47 GMT
  • ஜப்பசி மாத தேய்பிறை கிருத்திகையை முன்னிட்டு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது
  • இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

வேலாயுதம்பாளையம்

கரூர் மாவட்டம் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜப்பசி மாத தேய்பிறை கிருத்திகையை முன்னிட்டு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேமே் நடைபெரற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் ஆலயத்தில் ஜப்பசி மாத தேய்பிறை கிருத்திகையை முன்னிட்டு சுப்பிரமணியருக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேமே் நடைபெரற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

அதேபோல் புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெரற்றது. மேலும் நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் ஜப்பசி மாத தேய்பிறை கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெரற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெரருமானை தரிசனம் செய்து அருள் பெரற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News