உள்ளூர் செய்திகள் (District)
கரூரில் பைக் திருடிய வட மாநில வாலிபர் கைது
- கரூரில் பைக் திருடிய வட மாநில வாலிபர் கைது செய்யபட்டார்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசரித்தனர்.
கரூர்,
கரூர் தேர்வீதி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது29). காய்கறி வியாபாரியான இவர் கரூர் பஸ் ஸ்டாண்டில் தனது பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து சென்று பார்த்த போது பைக்கை காணவில்லை. இதுகுறித்து வெங்டேஷ் அளித்த புகாரின்படி கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசரித்தனர். விசாரணையில் பைக் திருடியவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிபின்குமார் (28) என தெரியவந்தது. இதையடுத்து பிபின் குமாரை கரூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.