உள்ளூர் செய்திகள் (District)

கரூரில் பணி நிரந்தரம் செய்ய கோரி தூய்மை பணியாளர்கள் மனு

Published On 2023-01-03 08:32 GMT   |   Update On 2023-01-03 08:32 GMT
  • கரூரில் பணி நிரந்தரம் செய்ய கோரி தூய்மை பணியாளர்கள் மனு அளித்தனர்
  • கரூர் மாநகராட்சியில் பொது சுகாதாரப் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

கரூர்:

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில், கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட மனுவில் தெரிவித்துள்ள தாவது:கரூர் மாநகராட்சியில் பொது சுகாதாரப் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்ற னர். ஆனால், தற்போதைய நிலவ ரப்படி 500 பேருக்கும் குறைவாகவே பணியாற்றுகின்றனர். இவர்களில் தூய்மை பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்படி குப் பைகளை தரம்பிரித்து இயற்கை உரம் தயாரித்தல், சுகாதார மேற்பார்வை யாளர்கள், குடிநீர் விநியோகிப்பவர் கள், பிளம்பர்கள், கணினி இயக்குப வர்கள், தரவு உள்ளிட்டவர்கள் ஆகிய பிரிவுகளில் பணியாற்றுகின்றனர். விரைந்து இவர்களில் 300 பேர் நிரந்தரப்படுத்தப்படாத தொழிலாளர்களாவார்கள்.இதேபோன்று குளித்தலை, பள்ளப்பட்டி புகலூர் ஆகிய நகராட்சிகள் அரவக்குறிச்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி, பழைய ஜெயங்கொண்ட சோழபுரம், மருதூர், நங்கவரம், புலியூர்,உப்பிடமங்கலம் பேரூராட்சிகளிலும் பணியாற்றுகின்றனர். ஒட்டு மொத்தமாக மாவட்டத்தில் நகர்ப் புற உள்ளாட்சிகளில் நிரந்தர தொழி லாளர்களைவிட நிரந்தரம் இல்லாத தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் நடுத்தர வயது மற்றும் அதிக வயதை கடந்தவர்களாகவே உள்ளனர். இவர்களுக்கு என பணி வாய்ப்பு என்பது வேறு எங்கும் சென்று தேட இயலாத நிலையில் உள்ளனர். எனவே, தொழிலாளர்களின் நிலையை கருதி பணி நிரந்தரம் செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







Tags:    

Similar News