உள்ளூர் செய்திகள் (District)

மனுக்கள் இலவசமாக எழுதித்தர ஏற்பாடு

Published On 2023-02-06 08:17 GMT   |   Update On 2023-02-06 08:17 GMT
  • சுயஉதவிக்குழுக்கள் மூலம் எழுதி கொள்ளலாம்
  • கலெக்டர் அறிவிப்பு

கரூர், 

மக்கள் குறைதீர் கூட்டத்தில், மனுக்கள் இலவச எழுதித்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் மனு கொடுக்க வரும் மக்களிடம் மனுக்கள் எழுதித்தர அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தது. மக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க மனுக்கள் பதியும் இடத்துக்கு அருகிலேயே, மாவட்ட நிர்வாகத்தால் சுயஉதவி குழுக்கள் மூலம், கட்டணம் ஏதுமின்றி இலவசமாக மனுக்களை எழுதித்தர, இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News