உள்ளூர் செய்திகள் (District)
- விவசாயிகள் தீவிரம்
- பசுமையாக வளர்ந்துள்ள அழகு
கரூர்,
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் சூரியகாந்தி அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பாக்கா பட்டி, வரகூர், குழந்தைப்பட்டி, சரவணபுரம், பாம்பன் பட்டி, நடுப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக சூரியகாந்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது, செடிகள் பசுமையாக வளர்ந்து சூரியகாந்தி செடிகளில் பூக்கள் பிடித்து, முற்றிய விதைகள் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.