உள்ளூர் செய்திகள் (District)
- சமையல் தீ எதிர்பாராத விதமாக பற்றியதால் விபரீதம்
- மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காததால் பரிதாபம்
கரூர்,
குளித்தலை அருகே, கல்லடை ஊர் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 42). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி. இவர், வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, இவர்களது 5 வயது ஆண் குழந்தையான ரமணாவின் சட்டையில் எதிர்பாராமல் தீப்பற்றிக் கொண்டது. திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. துரைராஜ் கொடுத்த புகாரின்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..