உள்ளூர் செய்திகள் (District)

தீக்காயமடைந்த குழந்தை சாவு

Published On 2023-03-07 07:03 GMT   |   Update On 2023-03-07 07:03 GMT
  • சமையல் தீ எதிர்பாராத விதமாக பற்றியதால் விபரீதம்
  • மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காததால் பரிதாபம்

கரூர்,

குளித்தலை அருகே, கல்லடை ஊர் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 42). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி. இவர், வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, இவர்களது 5 வயது ஆண் குழந்தையான ரமணாவின் சட்டையில் எதிர்பாராமல் தீப்பற்றிக் கொண்டது. திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. துரைராஜ் கொடுத்த புகாரின்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

Tags:    

Similar News