உள்ளூர் செய்திகள் (District)

நாரத கான சபா 78-ம் ஆண்டு விழா தொடக்கம்

Published On 2022-08-01 07:07 GMT   |   Update On 2022-08-01 07:07 GMT
  • நாரத கான சபா 78-ம் ஆண்டு விழா தொடங்கியது
  • வருகின்ற 10-ந் தேதி வரை நடைபெறுகிறது

கரூர்:

கரூர் நாரத கான சபா 78-ம் ஆண்டு விழா நேற்று தொடங்கியது. சிறப்பு விருந்தினராக கரூர் வைஸ்யா வங்கி நிர்வாக இயக்குநரும், முதன்மை செயல் அலுவலருமான பி.ரமேஷ்பாபு பங்கேற்றார். தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன செயல் இயக்குநர் எஸ்விஆர் கிருஷ்ணன் 78-ம் ஆண்டு மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் உதவி துணை தலைவர் ஆர்.பி.முத்தையா பரிசு வழங்கினார். விழாவையொட்டி நாள்தோறும் மாலை 6.30 மணிக்கு ஆக. 10-ந் தேதி வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

Tags:    

Similar News