உள்ளூர் செய்திகள் (District)

ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள்-மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வினியோகம்

Published On 2023-01-13 07:09 GMT   |   Update On 2023-01-13 07:09 GMT
  • ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது
  • விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடும் செய்யப்பட உள்ளது.

குளித்தலை:

குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராட்சாண்டர் திருமலையில் அமைந்துள்ள ஸ்ரீ விரையாச்சிலை, ஈஸ்வரர் சமேத ஸ்ரீ பெரியநாயகி அம்மன் மற்றும் ஸ்ரீ கோலமாவயிரம் கொண்ட பிடாரியம்மன், ஸ்ரீ கரையூர் மற்றும் ஸ்ரீ நீலமேகம் கோவில் ஊர் பொதுமக்கள் சார்பாக கடந்த 60 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து 61-ம் ஆண்டாக தை பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு வருகின்ற 17ந் தேதி நடைபெற உள்ளது.

விழா நடைபெறுவதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்து வாடிவாசல் அமைக்கப்பட்டு விழா நடக்க உள்ள நிலையில் அரசு விதிமுறைகளின் படி ஜல்லிக்கட்டு காளைகளுக்கான போட்டோ, மருத்துவ சான்றிதழ் மற்றும் பல்வேறு அரசு விதிமுறைகளுக்குட்பட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டு ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் 800 காளைகளுக்கும், 400 மாடு பிடி வீரர்களுக்கும் அனுமதி டோக்கன் வழங்கப்பட்டது.

விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடும் செய்யப்பட உள்ளது. விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். கரூர் மாவட்டத்திலேயே ஜல்லிக்கட்டு இங்கு மட்டுமே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News