உள்ளூர் செய்திகள்

இரு வீடுகளில் தீ விபத்து

Published On 2022-11-03 07:18 GMT   |   Update On 2022-11-03 07:18 GMT
  • இரு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது
  • ரூ. 2 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

கரூர்:

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சிக்குட்பட்ட கவுண்டம்பட்டி ஒத்தக்கடை பகுதியில் தங்கராசு மற்றும் சக்திவேல் ஆகியோர் அருகருகே வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில்இவர்களது வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்த வீட்டு உரிமையாளர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து போராடி தீயை அணைத்தனர். மேலும் அக்கம் பக்கத்தில் தீ பரவாமல் இருக்க அருகில் உள்ள வீடுகளில் தண்ணீரை பீச்சியடித்தனர்.

இந்த விபத்தில் வீட்டில் இருந்த ரூ. 15 ஆயிரம்ே ரொக்க பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள், பீரோ, கட்டில் உள்ளிட்ட பல எலக்ட்ரானிக் பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமாகின. இதன் மதிப்பு சுமார் ரூ. 2 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறுகின்றனர்,

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீ எப்படி பிடித்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீ விபத்தில் பாதிக்க ப்பட்ட குடும்பத்தினரை நங்கவரம் பேரூராட்சி துணை தலைவர் கவுண்டம்பட்டி அன்பழகன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News