உள்ளூர் செய்திகள் (District)

பணம் பறித்த வாலிபர் கைது

Published On 2023-05-02 07:37 GMT   |   Update On 2023-05-02 07:37 GMT
  • பணம் பறித்த வாலிபர் கைது செய்யபட்டார்
  • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்:

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள பூமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 40). இவர் கரூர் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த சுந்தரம் (24) என்பவர், ரவியின் சட்டைப்பையில் இருந்த பணத்தை திருடி உள்ளார். இதுகுறித்து ரவி கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, சுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News