உள்ளூர் செய்திகள்

ரூ.74 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்: கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

Published On 2023-10-04 15:53 IST   |   Update On 2023-10-04 15:53:00 IST
  • பாலக்கோடு பகுதியில் ரூ.74 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகளை அன்பழகன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
  • பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம் ,பி.செட்டி அள்ளி ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்ட பணிகளுக்கு பூமி பூஜை மற்றும் திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் கணபதி தலைமையில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை கோபால், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பி.செட்டி அள்ளி ஊராட்சியில் உள்ள தீத்தார அள்ளியில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், ஜோதி அள்ளியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட பூமி பூஜை, ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பி.செட்டி அள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா, பி.செட்டி அள்ளி காலணி யில் ரூ.6 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைத்தல், ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கொம்மநாய்கன அள்ளியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா மற்றும் ரூ.8 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் புதிய கழிவு நீர்கால்வாய் அமைக்க பூமி பூஜை என மொத்தம் ரூ.74 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பி.செட்டி அள்ளி ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி, கவுன்சிலர் விமலன், கூட்டுறவு சங்க தலைவர்கள் வீரமணி, புதுர் சுப்ரமணி, அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News