குமரி மாவட்டத்தில் டாஸ்மாக் பார் ஊழலை கண்டித்து
- அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை
நாகர்கோவில்,செப்.9-
முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் மதுபா னங்கள் விற்பனை செய்ய 113 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளின் அருகில் மது அருந்துவதற்கு பார் வசதிகள் ஏற்படுத்தப்பட் டுள்ளன.
கடந்த ஜனவரி 1-ந்தேதி அன்று 113 டாஸ்மாக் கடைகளுக்குரிய மதுபான பார் ஏலம் விடப்பட்டதில் 53 கடைகளுக்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டது. இதில் 25 மதுபான பார்களுக்கு மட்டுமே அரசுக்கு செலுத்த வேண்டிய ஏலத்தொகை யினை ஏலதாரர்கள் கட்டி யுள்ளனர். இந்த மதுபான பார்களிலிருந்து மட்டுமே அரசுக்கு மாதந்தோ றும் வருவாய் கிடைத்து வரு கிறது.
இந்நிலையில் மீதமுள்ள 88 மதுபான பார்களுக்கு ஏலம் எடுக்காமல் சட்ட விரோதமாக மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மதுவிலக்குத் துறை, டாஸ்மாக் ஆகிய துறை சார்ந்த அதிகாரிகளின் துணையுடன் முக்கிய அரசியல் கட்சியைத் சேர்ந்த தனிநபரின் வருவாய்க்காக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயை தடுத்து நிறுத்தி, தனிநபர் இந்த மதுபான பார்கள் மூலம் பயனடைந்து வருகிறார். மேலும் டாஸ்மாக் ஊழியர்களிடம் மாமூல் தர வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்தி வருகிறார்கள். இதனால் டாஸ்மாக் தொழி லாளர்கள் மனவேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு இனியும் காலம் தாழ்த்தாமல் சம்மந்தப்பட்ட துறைகள் இதுகுறித்து ஆய்வு நடத்தி அரசுக்கு மாதந்தோறும் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதுற்கு காரணமாக இருக்கின்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லா விட் டால் அ.தி.மு.க. சார்பில் விரைவில் டாஸ்மாக் அலுவ லகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.