உள்ளூர் செய்திகள் (District)

கோவில் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்ற காட்சி.

செங்கோட்டை ஆனந்த விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

Published On 2023-02-10 09:38 GMT   |   Update On 2023-02-10 09:38 GMT
  • ஆனந்த விநாயகர் கோவிலில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
  • சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி பக்தர்களுக்கு காட்சியருளினார்.

செங்கோட்டை:

செங்கோட்டையில் உள்ள ஆனந்த விநாயகர் கோவிலில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.முன்னதாக வருஷாபிஷேகம் அன்று காலை 9.05க்கு கணபதி பூஜை, புண்ணியாகவாசனம், பஞ்ச கவ்ய பூஜை, வேதிகா அர்ச்சனை, கும்பபூஜை, கணபதி ஹோமம், மூலமந்திர ஹோமம், அஸ்திர ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களுடன் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தீபாராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து விமானம் மற்றும் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி பக்தர்களுக்கு காட்சியருளினார். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பிரசாதம் பெற்று சென்றனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது.

Tags:    

Similar News