உள்ளூர் செய்திகள் (District)

கள்ளசாராயம் விற்றவர் கைது

Published On 2023-05-31 10:15 GMT   |   Update On 2023-05-31 10:15 GMT
  • கள்ளச்சாராயம் விற்று வருவதாக மத்தூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • பூ பாலன் (வயது 40) என்பவர் கள்ளச்சாராயம் விற்று வந்தது தெரிய வந்தது.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள பெருமகவுண்டனூர் பகுதியில் கள்ளச்சாராயம் விற்று வருவதாக மத்தூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் ரோந்து சென்று சோதணை செய்ததில் அப்பகுதியில் உள்ள மாந்தோப்பு பகுதியில் பெரமகவுண்டனூர் பகுதியை சேர்ந்த பூ பாலன் (வயது 40) என்பவர் கள்ளச்சாராயம் விற்று வந்தது தெரிய வந்தது.

உடனே அவரை போலீசார் கைது செய்து 110 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News