உள்ளூர் செய்திகள் (District)

முகாமில் மாணவர்களுக்கு வங்கி கல்வி கடனுதவிகளை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.


தேனி மாவட்டத்தில் ரூ.4.56 கோடி மதிப்பில் 100 மாணவர்களுக்கு கடனுதவி

Published On 2023-11-23 05:54 GMT   |   Update On 2023-11-23 05:54 GMT
  • தேனியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில் கல்லூரி மாணவர்களுக்காக நடைபெற்ற கல்விக் கடன் முகாம் நடைபெற்றது.
  • இதில் 100 மாணவர்களுக்கு ரூ.4.56 கோடி மதிப்பிலான வங்கி கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது.

தேனி:

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில் கல்லூரி மாணவர்களுக்காக நடைபெற்ற கல்விக் கடன் முகாமில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா 100 மாணவர்களுக்கு ரூ.4.56 கோடி மதிப்பிலான வங்கி கல்வி கடனுதவிகளை வழங்கினார்.

இதில் கலெக்டர் பேசியதாவது,

வங்கிகளில் உள்ள கடன் திட்டங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், கடன் வாங்குவதற்கான புரிதல் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்து வதற்காகவும் இந்த கல்வி கடன் முகாம் நடத்தப்படு கிறது.

ஆன்லைன் மூலம் சுலபமாக விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் திட்டங்களை நேரில் மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காகவும், சேமிப்பு மற்றும் கடன் பற்றிய புரிதல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் ஏற்படுத்துவதற்காகவும் இந்த முகாம் நடத்தப்படு கிறது.

இதில் 100 மாணவர்க ளுக்கு ரூ.4.56 கோடி மதிப்பிலான வங்கி கல்வி கடன் வழங்கப்பட்டு ள்ளது. மேலும், கடந்த முறை நடைபெற்ற கல்வி கடன் முகாமில் 36 மாணவர்களுக்கு ரூ.1.8 கோடி மதிப்பிலான வங்கி கல்வி கடன் வழங்கப்பட்டது.

இதுவரை, தேனி மாவட்டத்தை சேர்ந்த 136 மாணவர்களுக்கு ரூ.6.36 கோடி மதிப்பில் வங்கி கல்வி கடன் வழங்கப்பட்டு ள்ளது. இதுபோன்ற கல்வி கடன் முகாம் குறித்து பிற மாணவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என பேசினார்.

கல்விக் கடன் முகாமில் பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, வேளாண் மற்றும் தோட்ட க்கலை கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி என அனைத்து வகையான கல்லூரிகளில் படிக்கின்ற முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக தேனி மாவட்டதில் உள்ள வங்கிகளின் மேலாளர்கள் முகாமில் கலந்துகொண்டு மாணவர்கள் இணைய தளத்தின் மூலம் சுலபமாக கல்விக்கடன் விண்ண ப்பத்தை பதிவு செய்வத ற்கான பணிகள் மற்றும் வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

Tags:    

Similar News