உள்ளூர் செய்திகள் (District)

கஞ்சா விற்ற 10 பேர் கைது

Published On 2022-08-29 08:12 GMT   |   Update On 2022-08-29 08:12 GMT
  • மதுரையில் கஞ்சா விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • ஜெய்ஹிந்த்புரம் போலீசார் நேற்று காலை சுந்தர்ராஜபுரம் மாநகராட்சி பூங்கா அருகில் ரோந்து சென்றனர்.

மதுரை

தெப்பக்குளம் போலீசார் நேற்று மாலை கேட்லாக் ரோடு சந்திப்பில் வாகன தண்க்கையில் ஈடுபட்டனர்.

அப்போது கீரைத்துறை மூக்கன் சந்து பொன்னுசாமி மகன் தனுஷ்கோடி (வயது 18) என்பவரை 1.100 கிலோ கிராம் கஞ்சாவுடன் கைது செய்தனர்.

ஜெய்ஹிந்த்புரம் போலீசார் நேற்று காலை சுந்தர்ராஜபுரம் மாநகராட்சி பூங்கா அருகில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்ற நரிக்குடி பிள்ளையார் கோவில் தெரு, முனீஸ்வரன் மகன் முத்துக்குமார் (24), வில்லாபுரம், மீனாட்சி நகர், முத்துராமலிங்கம் தெரு, ரவிராஜன் மகன் சிவகுமார் (23), மீனாம்பிகை நகர் மாரி மகன் கண்ணன் (23), ஜெய்ஹிந்த்புரம் பிள்ளையார் கோவில் தெரு வெங்கடேசன் (27) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் 1.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை திடீர் நகர் போலீசார் நேற்று மாலை ஹீராநகர் தண்டவாளம் அருகே ரோந்து சென்றனர்.

அங்கு 1.100 கிலோ கஞ்சாவுடன் எழுமலை, பழைய அரண்மனை தெரு சிவன் பாண்டியன் (35), நேதாஜி ரோடு சதீஷ் குமார் (24), குருவித்துறை, நடுத்தெரு அருண் குமார் (25), எம். புதுப்பட்டி பிள்ளையார் கோவில் தெரு, சசிகுமார் மகன் அபினேஷ் (21) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News