உள்ளூர் செய்திகள்

கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் ஏலம்

Published On 2022-11-19 08:31 GMT   |   Update On 2022-11-19 08:31 GMT
  • கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் 24-ந் தேதி ஏலம் விடப்படுகிறது.
  • தமிழ்நாடு சிறப்புகாவல் படை 6-ம் அணி அலுவலக வளாகத்தில் நடக்கிறது.

 மதுரை

தமிழ்நாடு சிறப்புகாவல் படை 6-ம் அணி, மதுரையில் உள்ள அலுவலக வளாகத்தில் முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்களை பொது ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலம் வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மதுரையில் உள்ள தமிழ்நாடு சிறப்புகாவல் படை 6-ம் அணி அலுவலக வளாகத்தில் நடக்கிறது.

ஏலத்திற்குண்டான காவல் வாகனங்கள் இந்த அலுவலக வளாகத்தில் 24-ந் தேதி காலை 11 மணிக்குள் ரூ.1000/- முன் வைப்பு தொகையினை செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் ஏலம் எடுத்தவர்கள் காவல் வாகனங்களுக்கான ஏலத்தொகை மற்றும் ஜி.எஸ்.டி. விற்பனை வரியுடன் சேர்த்து 24-ந் தேதி உடனே செலுத்த வேண்டும்.

மேற்கண்ட தகவலை மதுரை தமிழ்நாடு சிறப்புகாவல் படை 6-ம் அணி தளவாய் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News