உள்ளூர் செய்திகள்
நாடார்உறவின்முறை சார்பில் காமராஜர் பிறந்த தின விழா
- கரும்பாலை நாடார்உறவின்முறை சார்பில் காமராஜர் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
- உறுப்பினர்கள் 200 பேர் பால்குடம் எடுத்து வந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அபிஷேகம் செய்தனர்.
மதுரை
மதுரை கரும்பாலை நாடார்உறவின்முறை சார்பில் காமராஜர் பிறந்த தின விழா நடந்தது. மைக்கேல் ராஜ் தலைமை தாங்கினார். வேல்முருகன், மகளிர் அணியை சேர்ந்த பாக்கியலட்சுமி, கோகிலா மற்றும் ேமாகன், சேகராஜ் முன்னிலை வகித்தனர்.
மகளிர் மற்றும் உறவின்முறை நிர்வாகிகள், உறுப்பினர்கள் 200 பேர் பால்குடம் எடுத்து வந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அபிஷேகம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை குட்டி என்ற அந்தோணிராஜ், சுவிட்ராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.