உள்ளூர் செய்திகள் (District)
- அலங்காநல்லூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் ஸ்டேட் வங்கி முன்பு மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொருளாளர் நூர் முகமது, மகளிரணி தலைவி செல்லப்பா சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயமணி, திலகராஜ், வட்டார தலைவர்கள் சுப்பாராயலு, காந்தி, குருநாதன், பழனிவேல், நகர் தலைவர்கள் சசி, முருகானந்தம், முத்து பாண்டி, அமைப்பு சாரா மாவட்ட தலைவர் சோனைமுத்து, இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் வருசை முகமது, பாலமேடு சந்திரசேகர், மனித உரிமை வட்டாரத் தலைவர் சரந்தாங்கி முத்து, முன்னாள் தலைவர் மலைகணி, திரவியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.