உள்ளூர் செய்திகள் (District)
- புனித ஜெர்மேனம்மாள் திருவிழா நடந்தது.
- ஏற்பாடுகளை புனித ஜெர்மேனம்மாள் ஆலயம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே ராயபுரம் கிராமத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான புனிதஜெர்மேனம்மாள் ஆலய 111-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
இதைத்தொடர்ந்து திருப்பலி மறையுரை நடந்தது.
விழா நடைபெறும் நாட்களில் தினசரி கொடி பவனி, ஜெபமாலை, திருப்பலி நடைபெறும். வருகிற 22-ந் தேதி இரவு திருவிழா திருப்பலி, தேர் பவனி, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது.
மறுநாள் 23-ந் தேதி புது நன்மை விழா, தேர் பவனி, 24-ந் தேதி காலை நன்றி திருப்பலி, கொடியிறக்கம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை புனித ஜெர்மேனம்மாள் ஆலயம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.