உள்ளூர் செய்திகள் (District)

தீயாய் பரவும் 'மெட்ராஸ்-ஐ'

Published On 2022-11-21 08:16 GMT   |   Update On 2022-11-21 08:16 GMT
  • தீயாய் பரவும் ‘மெட்ராஸ்-ஐ’ நோயார் தினமும் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
  • கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருப்பு கண்ணாடி அணிந்து கொள்வதால் நோய் மற்றவர்களுக்கு பரவும் தன்மை குறையும்

மதுரை

மதுரையில் தீயாய் பரவி வரும் மெட்ராஸ்- ஐ கண் நோயால் தினம் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகி றார்கள்.

தற்போது மழை மற்றும் பனிக்காலமாக இருப்பதால் பருவநிலை மாற்றம் காரணமாக பல்வேறு தொற்று நோய்கள் மனிதர்களுக்கு பரவி வருகிறது.

அந்த வகையில் மெட்ராஸ் -ஐ என்று அழைக்கப்படும் கண் வலி நோய் தற்போது மதுரை பகுதியில் அதிகளவில் பரவி வருகிறது. காட்டுத் தீப்போல ஒவ்வொரு நாளும் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இந்த கண் நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு இந்த நோய் பரவும் தன்மை கொண்டதால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு முன்னெச்ச ரிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

மதுரையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் மெட்ராஸ்-ஐ யால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 500-க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கான சிகிச்சையில் கண்களுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுக்கு இந்த நோய் வராமல் தடுக்கும் வகையில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதுடன் கைகளையும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருப்பு கண்ணாடி அணிந்து கொள்வதால் நோய் மற்றவர்களுக்கு பரவும் தன்மை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு இந்த கண் வலி எளிதில் பரவும் என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் அருகில் செல்வதை தவிர்த்து தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கைகளை கொண்டு கண்களை கசக்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் டாக்டர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

சுமார் 5 நாட்களுக்கு கண்கள் சிவந்து வீக்கம் ஏற்பட்டு நீர் வடியும் தன்மை கொண்ட இந்த நோய் காரணமாக கண் உறுத்தல் உள்ளிட்ட வலியும் காணப்படும் என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்வது தான் இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News