உள்ளூர் செய்திகள் (District)

நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை

Published On 2023-05-08 09:02 GMT   |   Update On 2023-05-08 09:02 GMT
  • நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்தனர்.
  • மாணவ, மாணவிகள் 98.60 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளி யாகின. இதில் மதுரை தெற்கு வாசல் நாடார் வித்தி யாபிவிருத்தி சங்கத்துக்கு பாத்தியப்பட்ட நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்துள்ளனர். அதன்படி பள்ளியில் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் 98.60 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் வேதியியல், கணினி அறிவியல், வணிக வியல் பாடங்களிலும் மாணவ, மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப் பெண்கள் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாண வர்களையும், அவர்களை ஊக்குவித்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் அலுவலக பணி யாளர்கள் ஆகியோருக்கு மதுரை தெற்குவாசல் நாடார் வித்தியாபிவிருத்தி சங்கம் (உறவின்முறை) துணை செயலாளர் அருஞ்சுணை ராஜன், நாடார் மேல் நிலைப்பள்ளி தலைவர் பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் வாழத்து தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News