உள்ளூர் செய்திகள்

குடியிருப்பு பகுதியில் மழைநீர் வடியாமல் தேங்கி இருப்பதையும், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களையும் படத்தில் காணலாம்.

மழை வெள்ளம் தேங்கியதால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

Published On 2023-05-07 08:51 GMT   |   Update On 2023-05-07 08:51 GMT
  • மேலமடை குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம் தேங்கியதால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மதுரை

மதுரையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மதுரை அண்ணா பஸ் நிலையம், கே.கே. நகர், மேலமடை, தமுக்கம் மைதானம், கே.புதூர், பெரியார் பஸ் நிலையம், காளவாசல், பழங்காநத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.

சரியான வடிகால் வசதிகள் இல்லாததால் மழைநீர் வடியாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதேபோல் மதுரை 36-வது வார்டுக்கு உட்பட்ட மேலமடை பகுதியிலும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. தண்ணீர் வடியா மல் தேங்கி உள்ளதால் சேறும், சகதியுமாக மாறி மக்கள் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சியில் புகார் செய்தனர். இருந்தபோதிலும் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை விரகனூர் பிரதான சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இத னால் அந்த வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் நின்றன. அதன் காரணமாக அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதற்கிடையே பொது மக்களின் சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்த கருப்பாயூரணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் மேலமடை குடியிருப்பு களுக்குள் புகுந்த மழை நீரை அகற்றினால் தான் சாலை மறியலை கைவிடு வோம் என்று உறுதியாக கூறினர். இதை தொடர்ந்து 36-வது வார்டு மாநகராட்சி பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குடியிருப்பு பகுதியில் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி னர். இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர்.

Tags:    

Similar News