உள்ளூர் செய்திகள் (District)

சோழவந்தானில் நாளை மின்தடை

Published On 2022-12-22 07:49 GMT   |   Update On 2022-12-22 07:49 GMT
  • சோழவந்தானில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
  • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

மதுரை

சோழவந்தான் துணை மின்நிலையத்தில் நாளை (23-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோழவந்தான், தச்சம்பத்து, வாட்டர் பம்பிங் ஸ்டேஷன், இரும்பாடி, மீனாட்சி நகர், மேலக்கால், தாராபட்டி, கச்சிராயிருப்பு, கீழமட்டையான், மேலமட்டையான், நாராயணபுரம், தேனூர், திருவேடகம், அச்சம்பத்து, மேலக்கால் பாலம், தென்கரை, ஊத்துக்குளி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்ப நாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமு கராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News