உள்ளூர் செய்திகள்
ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
- மாவட்ட தலைவர் மாரிச்சாமி தலைமை தாங்கினார்.
மதுரை
மதுரை புதூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று காலை தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மாரிச்சாமி தலைமை தாங்கினார். மாநில துணை பொது செயலாளர் பிச்சைராஜன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஜனவரி மாதம் 2022 முதல் 3 சதவீத அகவிலைபடியை வழங்க வேண்டும். மின்துறையை தொடர்ந்து பொது துறையாக இயக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் குறைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.