உள்ளூர் செய்திகள்

சந்தனக்கூடு திருவிழா

Published On 2022-10-16 08:07 GMT   |   Update On 2022-10-16 08:07 GMT
  • சந்தனக்கூடு திருவிழா நடந்தது.
  • சந்தனக்கூடு நிறைவடைந்த பிறகு தர்காவுக்கு வந்தவர்களுக்கு சந்தனம் வழங்கப்பட்டது.

அலங்காநல்லூர்

அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள அரபு மஸ்தான் வலியுல்லாஹ் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தர்காவில் உள்ள கொடி கம்பத்தில் சந்தனமிட்ட கொடிமர திருவிழா நடந்தது. இரவு மின் அலங்காரத்தில் சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது.

மேளதாளம் முழங்க அய்யூர் கிராமத்தில் முக்கிய வீதிகளின் வழியாக சந்தனக்கூடு கொடிமரம் வலம் வந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அலங்காநல்லூர் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

ஜமாத் தலைவர் அப்பாஸ், செயலாளர் அப்பாஸ் மந்திரி, பொருளாளர் கமர்தீன், துணைத் தலைவர் முகமது சலீம், துணைச் செயலாளர் அபுதாஹீர் அசன், ஊராட்சி மன்ற தலைவர் அபுதாஹிர், ஊர் நாட்டாமை கதிரேசன் மற்றும் ஊர் பெரியவர்கள், கிராம மக்கள், ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர். சந்தனக்கூடு நிறைவடைந்த பிறகு தர்காவுக்கு வந்தவர்களுக்கு சந்தனம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News