உள்ளூர் செய்திகள்

ரூ1.40 கோடியில் வாங்கப்பட்ட ஹைடெக் மண் அகற்றும் வாகனங்களை தொடங்கி வைத்த மேயர்

Published On 2023-03-29 08:44 GMT   |   Update On 2023-03-29 08:44 GMT
  • திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு ரூ1.40 கோடியில் வாங்கப்பட்ட ஹைடெக் மண் அகற்றும் வாகனங்கள் மேயர் தொடங்கி வைத்தார்.
  • பாதாள சாக்கடைகளில் அடிக்கடி அடைப்பு கள் ஏற்படுவதை உடனடியாக சரிசெய்வதற்கு வாங்கப்பட்டுள்ளது.

மதுரை

மதுரை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிதிட்ட பணியின் கீழ் சாலைகள் அமைத்தல், மழைநீர் வடிகால்கள், பாதா ளச்சாக் கடை பணிகள், தெருவிளக்குகள் பராமரித்தல், தூய்மை பணிகள், கால்வாய்கள் தூர்வாருதல், மழைநீர் சேகரிப்பு கட்ட மைப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடைகளில் அடிக்கடி அடைப்பு கள் ஏற்படுவதை உடனடியாக சரிசெய்வதற்கு மாநகராட்சியில் கழிவுநீர் உறிஞ்சு வாகனங்கள் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது பாதாள சாக்கடை யில் ஏற்படும் மணல்களை மட்டும் பிரித்து உடனுக்குடன் எடுத்து அகற்றுவதற்கு 15 சி.எப்.சி. திட்டத்தின் கீழ் ரூ1.40கோடி மதிப்பீட்டில் 12 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளது. அந்த வாகனங் களை மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் ஆகியோர் பயன்பாட்டிற்கு கொடி யசைத்து பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

இந்த புதிய வாகனத்தின் மூலம் மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடைகளில் ஏற்படும் மணல் அடைப்புகள் உடனுக்குடன் விரைந்து சரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மண்டலத்தலைவர்கள், நகர பொறியாளர் அரசு, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஷ்வரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News