உள்ளூர் செய்திகள் (District)

மூக்கையாதேவர் நினைவிடத்தில் ரவீந்திரநாத் எம்.பி. மரியாதை செலுத்தினார்.

மூக்கையாதேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி

Published On 2022-09-07 07:53 GMT   |   Update On 2022-09-07 07:53 GMT
  • மூக்கையாதேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் ரவீந்திரநாத் குமார் எம்.பி. பங்கேற்றார்.
  • பஸ் நிலையம் முன்பு உள்ள மூக்கையாத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் பி.கே. மூக்கையாதேவர் நினைவிடம் உள்ளது. இங்கு மூக்கையாதேவரின் 43-வது நினைவு தினத்தை முன்னிட்டு குருபூஜை நடைபெற்றது. இதில் மேல்சபை எம்.பி. ரவீந்திரநாத் குமார் கலந்து கொண்டு மூக்கையாதேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இதையொட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து நடைபெற்ற ஊர்வலத்திற்கு மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கதிரவன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் கர்ணன், சுப்புராஜ், திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதேபோல் மூக்கையாத்தேவர் குருபூைஜயை முன்னிட்டு சோழவந்தான் பேரூர் தி.மு.க. சார்பில் செயலாளர் சத்தியபிரகாஷ் தலைமையில் பஸ் நிலையம் முன்பு உள்ள மூக்கையாத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் பேரூர் தலைவர் ஜெயராமன், மாநில பொதுக்குழு ஸ்ரீதர், அண்ணாதுரை, உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல மறத்தமிழர் சேனையின் மாநில தலைவர். புதுமலர் பிரபாகரன் அறிவுறுத்தலின்பேரில் மாநில துணை பொது செயலாளர் ஆதிமுத்துகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மூக்கையாத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

Tags:    

Similar News