உள்ளூர் செய்திகள் (District)

பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்த மேயர்: அதிகாரிகள் அதிர்ச்சி

Published On 2024-09-24 06:30 GMT   |   Update On 2024-09-24 06:30 GMT
  • வகுப்பறை முழுவதும் குப்பைகளாக காட்சியளித்தன.
  • காலணிகள் அணிந்து கொண்டு வகுப்பறைக்கு செல்ல வேண்டும்.

கடலூர்:

கடலூர் மாநகராட்சி பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சி பள்ளியை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே காலணிகளை கழட்டி விட்டு சென்றதை கண்டார்.

இதை பார்த்த மேயர் சுந்தரி ராஜா, மாணவர்களுக்கு ஏன் பாகுபாடு என்ற கேள்வி எழுப்பி அனைவரும் காலணிகள் அணிந்து கொண்டு வகுப்பறைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி மேயர் அனைத்து வகுப்பறைகளுக்கும் மிதியடி வழங்கினார்.

பின்னர் வகுப்பறையை ஆய்வு செய்யும்போது, வகுப்பறை முழுவதும் குப்பைகளாக காட்சியளித்தன. இதனை சுத்தம் செய்ய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

அப்போது சுத்தம் செய்ய ஊழியர்கள் வருவதற்கு காலதாமதமானதால் உடனடியாக தானே துடைப்பத்தை கையில் எடுத்துக்கொண்டு வகுப்பறையை நானே சுத்தம் செய்து விட்டு செல்கிறேன் என்று வகுப்பறை முழுவதும் பெருக்கி தூய்மை படுத்தினார்.

மேலும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் அறையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். இதனைப் பார்த்த மாநகராட்சி சுகாதார அலுவலர் மற்றும் உறுப்பினர்கள் செய்வதறியாமல் திகைத்து அதிர்ச்சியடைந்து நின்றனர் .

இனி வருங்காலங்களில் மாநகராட்சி பள்ளியை தூய்மையாக வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அப்போது மாநகர நல அலுவலர் எழில் மதனா, சுகாதார அலுவலர் அப்துல் ஜாபர், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, மண்டல குழு தலைவர் பிரசன்னா, கவுன்சிலர்கள் சுபாஷிணி ராஜா, சுதா அரங்கநாதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News