உள்ளூர் செய்திகள்
நெல்லை அருகே வியாபாரியின் மோட்டார் சைக்கிள் திருட்டு- வடமாநில தொழிலாளி கைது
- முகமது சமீர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார்.
- விசாரணையில் மோட்டார் சைக்கிளை ராஜேஷ்ராம் திருடியது தெரியவந்தது.
நெல்லை:
பேட்டையை சேர்ந்தவர் முகமது சமீர் (வயது20). இவர் அப்பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அதனை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக அவர் பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளியம்மாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அவரது மோட்டார் சைக்கிளை நெல்லையில் தங்கியிருந்து வேலை பார்த்துவரும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ்ராம் (30) என்பவர் திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.