உள்ளூர் செய்திகள் (District)
தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் அர.சக்கரபாணி ஆலோசனை
- ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
- நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி மூலம் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட கலெக்டர் விசாகன், வருவாய் அலுவலர் லதா, அலுவலர் பிரபு, கோட்டாட்சியர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், அந்தோணியார், நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்டத் துணை செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன், தங்கராஜ், சுப்பிரமணி,
ஒன்றிய தலைவர்கள் அய்யம்மாள், சத்தியபுவனா, நகர் மன்ற தலைவர் திருமலைசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், ஊராட்சி மன்ற தலைவர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.