உள்ளூர் செய்திகள் (District)
பஸ் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல்
- பஸ் மரத்தில் மோதியதில் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நன்னிலம் லயன் கரைத் தெருவில் திடீர் தீ விபத்தில் எரிந்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
நன்னிலம்:
நன்னிலத்தில் அரசு பஸ் மரத்தில் மோதியதில் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயம டைந்தவர்கள் நன்னிலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகி ன்றனர். இந்நிலையில் அவர்களை ஆர். காமராஜ் எம்.எல்.ஏ. சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் நன்னிலம் அரசு மருத்துவமனையில் விபத்துக்கு உள்ளாகி அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதே ப்போல் நன்னிலம்லயன் கரைத் தெருவில்திடீர் தீ விபத்தில் எரிந்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு குடும்ப த்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் முன்னாள் எம்.பி. டாக்டர் கோபால், அ.தி.மு.க நகர செயலாளர் பக்கிரிசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.